Ads 468x60px

Related Posts Plugin for WordPress, Blogger...

மகா சிவராத்திரியின் ஆன்மீக முக்கியத்துவம்


மகா சிவராத்திரி விழா பாரதம் முழுவதிலும் பயபக்தியோடு கொண்டாடப்படுகின்றது. இத்திருநாளில் பக்தர்கள் சிவலிங்கத்திற்கு வில்வத்தை அற்பணம் செய்து, விரதமிருந்து முழு இரவும் கண்விழித்து பக்தி செய்கின்றார்கள். இந்தத் திருநாளை ஆன்மீக சிறப்பு உணர்ந்து கொண்டாடவேண்டுமேன்றால், கடவுள் சிவனைப் பற்றியும், சிவராத்திரி எதன் ஞாபகார்த்தமாக கொண்டாடுகின்றோம் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இராமேஸ்வரத்தில், இராமர் எப்படி சிவனை உதவிக்கு அழைத்தார் என்றும், கோப்பேஸ்வரத்தில் கிருஷ்ணர் எப்படி சிவபூஜை செய்தார் என்றும், அமர்நாத், சோமநாத், விஸ்வநாத் என்று பாரதம் முழுவதிலும் உள்ள பிரசித்தி பெற்ற 12 ஜோதிர்லிங்கங்கள் சிவனின் திவ்விய கர்த்தவ்வியத்தை எடுத்துக்காட்டுகின்றன.
இந்த 12 ஜோதிர்லிங்கங்களும், சிவன், கடவுளின் ரூபம் ஒளியாக இருப்பதை உணர்த்துகின்றது. சிவனுடைய லிங்க ரூபம், கடவுள் மனித ரூபத்தில் இல்லாமல், நிராகாரமாக (உடலற்றவராக) இருக்கின்றார் என்பதை காட்டுகின்றது. மேலும் சிவனை சுயம்பு என்று வர்ணிப்பதன் பொருள், பரமாத்மாவான அவருக்கு மேல் படைப்பவர் என்று யாருமில்லை என்பதாகும்.
சிவா என்ற சொல்லின் பொருள் அனைத்து ஆத்மாக்களுக்கும் நம்மை செய்வர் என்பதாகும். சிவலிங்கத்தில் இருக்கும் 3 கோடுகளின் பொருளாவது, சிவனே பிரம்மாவின் மூலம் புதிய உலகைப் படைக்கின்றார், விஷ்ணுவின் மூலம் காத்தருளுகின்றார், விகாரங்கள் மற்றும் அநீதியை பழைய உலகிலிருந்து அழிக்கின்றார் என்பதாகும். அவரே அனைத்து ஆத்மாக்களுக்கும் முக்தியும், ஜீவன்முக்தியும் அருளுகின்றார்.
சிவராத்திரி திருவிழா, இந்த பூலோகத்தில் இருள் என்கின்ற அறியாமை நிறைந்திருக்கின்ற நேரத்தில் கடவுள் சிவன் அவதரிப்பதைக் குறிப்பதாகும். இராத்திரி என்பது ஆத்மாக்களாகிய நாம் நம்மைப் பற்றி, கடவுளைப் பற்றி மற்றும் விகாரங்கள் நிறைந்த உலகைப் பற்றி அறியாமல் இருப்பதை குறிப்பதாகும். சிவனே ஞானக்கடலாக வந்து, அறியாமையிலிருக்கும் நமக்கு சத்தியஞானம் என்ற ஒளியைக் கொடுத்து உண்மையைப் புரிய வைக்கின்றார். மதங்கள் சீர்குலைந்து போகும்போது நான் வருவேன் என்று கூரியதற்கேற்ப, தூய்மையற்ற கலியுகத்தை மாற்றி, தூய்மையான தெய்வீக சத்யுகத்தை, சொர்க்கத்தை இராஜ யோகத்தின் ஸ்தாபனம் செய்கின்றார்.
கடவுளே நம்முடைய தந்தையாக, ஆசிரியராக மற்றும் சத்குருவாக இருந்து இந்த நேரத்தில் நமக்கு வழிக்காட்டுகின்றார். இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு சுகம், சாந்தி நிறைந்த சொர்க்கவாசிகள் ஆகுவீர்களாக! இராஜ யோகம் பயில்வீர்களாக!

பிரம்மா குமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக்கழகம்
சுயமாற்றமே, உலக மாற்றம்

பிரம்மா குமாரிகள் இராஜயோக தியான பயிற்சிகள் உலகம் முழுவதிலும் 120 நாடுகளில், இலவசமாக கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

L. Kamal Nath

0 கருத்துரைகள்: