Ads 468x60px

Related Posts Plugin for WordPress, Blogger...

கூகுள் காட்டும் எல்லாப் புத்தகங்களையும் படிக்க புதிய மென்பொருள்

குகுளில் சென்று புத்தகத்தின் பெயரைக் கொடுத்து தேடினால் கிடைக்கும்
முடிவுகளில் பெரும்பாலானவை கூகிள் புக்ஸ் இணையதளத்திற்கு
சென்று புத்தகத்தின் பக்கத்தை நமக்கு காட்டுகிறது. புத்தகங்கள்
பலவற்றை பல உலாவிகளில் நாம் படிக்க முடிவதில்லை, கூடவே
அதிக நேரமும் எடுத்துக்கொள்கிறது. எந்தப் பிரச்சினையும் இல்லாமல்
கூகுள் புத்தகங்களைத் தேடவும் படிக்கவும் புதிதாக ஒரு டெஸ்க்டாப்
மென்பொருள் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



சில மில்லியன் இலவச புத்தகங்களை தன்னகத்தே வைத்தும் பல
மில்லியன் புத்தகங்களின் முக்கியமான பக்கங்களை வைத்தும் உள்ள
கூகுள் புக்ஸ் தளங்களில் சென்று நாம் புத்தகத்தை உலாவி வழியாக
தேடுவதற்கு பதிலாக ஒரு மென்பொருள் வந்துள்ளது. மென்பொருளின்
பெயர் கூரீடர்(GooReader) இந்தச் சுட்டியைச் சொடுக்கி மென்பொருளை
தரவிரக்கிக்கொள்ளவும்.
Download
இந்த மென்பொருளை தரவிரக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும்
அடுத்து இந்த மென்பொருளை இயக்கி நமக்கு தேவையா புத்தகத்தின்
பெயரைக் கொடுத்து தேடவேண்டியது தான் உடனடியாக நமக்கு
புத்தகங்களை காட்டுகிறது இதிலிருந்து நாம் பார்க்க விரும்பும்
புத்தகத்தை சொடுக்கினால் தனி புத்தகமாக நமக்கு இபுக் வடிவில்
திறந்து பார்க்கும்படி உள்ளது. அனைத்து வகையான புத்தகங்களையும்
நாம் இந்த மென்பொருளின் மூலம் சில நிமிடங்களில் பார்க்கலாம்.
புத்தகப்பிரியர்களுக்கு இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக
இருக்கும். மென்பொருளின் அளவு 1.1 MB தான். விண்டேஸ் எக்ஸ்பி
விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் நாம்
இதை டெஸ்க்டாப் அப்ளிகேசனாகப் பயன்படுத்தலாம்.இந்த
மென்பொருளைப்பற்றிய சிறப்பு வீடியோவையும் இத்துடன்
இணைத்துள்ளோம்

நன்றி : winmani.wordpress.com

எந்த வகை கீபோர்ட்-லும் மின்னல் வேக தட்டச்சு செய்ய புதிய வழி முறை.

தினமும் புதிது  புதிதாக வரும் தட்டச்சு பலகையிலும் நாம் திறமையான முறையில் வேகமாக தட்டச்சு செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.



டெஸ்க்டாப் கணினியில் மட்டும் அல்ல மடிக்கணினியிலும் நாம்
மின்னல் வேகத்தில் தட்டச்சு செய்யலாம், எந்த தட்டச்சு வகுப்பு
செல்ல வேண்டியதில்லை,எந்த பணச்செலவும் இல்லாமல் நம்
நேரத்தை மட்டுமே செலவு செய்து எளிதாக இருக்கும் இடத்தில்
இருந்து தட்டச்சு பலகலாம். கணினி வல்லுனர்களில் பலபேர்
தட்டச்சு செய்வதற்கு சில மணி நேரம் செலவளிக்கின்றனர்
இந்த நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவும் நம் தட்டச்சு வேகத்தை
அதிகப்படுத்துவதற்காகவும் ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.typinglessons-online.com/EN/
இந்தத்தளத்திற்கு சென்று நாம் எந்த வகை விசைப்பலகை
பயன்படுத்துகிறோம் என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியது
தான் அடுத்து அவர்கள் சில வகை பயிற்சிகள் கொடுக்கின்றனர்
எளிதாகவும் புதுமையாகவும் இருக்கிறது. அவர்கள் கொடுக்கும்
எழுத்துக்களை நாம் தட்டச்சு செய்யவேண்டும் அதில் எத்தனை
சரி என்று உடனுக்கூடனே காட்டிவிடுகின்றனர்.தட்டச்சு பலகையின்
படமும் திரையில் தெரிகிறது. தினமும் சில மணி நேரம் செலவு
செய்தால் கண்டிப்பாக நாமும் மின்னல் வேகத்தில் தட்டச்சு
செய்யலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, கண்டிப்பாக இந்தப்
பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அமைவு

hand209
இது
தலைமுறை இடைவெளியின்
ஏங்கலும்…
ஏந்தலும்…

பாதுகாப்பை
உணரும் தருணம்…
இதுபோல் அமையுமா
ஈழத்தில்?

இடர்

இடர்

தெரிகிறதா……
இடர்களுக்கு மத்தியில்
எங்களின் ஏக்கம்?
இன்னுமா வரவில்லை
எங்களிடம் தாக்கம்??
      (ஈழத்தில் ஒரு காட்சி) 

குழந்தை

தாய்ப்பால் வாரம்


'தாய்ப்பால் வாரம் அல்ல அல்ல தாய்ப்பால் வரம்'

உலக தாய்ப்பால் வாரம் நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்குக் கொண்டாடப்பட்டது. தாய்ப்பால் அளிப்பது வரம். அதற்குக் கொடுப்பினை வேண்டும். எத்தனையோ பெண்கள் குழந்தை இல்லாமையால் வருத்தப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் குழந்தை பெறும் வரம் பெற்றவர்கள் அந்தப் பேற்றின் மகத்துவம் தெரியாமல் அதை அலட்சியப் படுத்துகின்றனர்.
ஒரு பெண் தாய்மை அடையும்போது இயற்கையாகவே அப்பெண்ணின் உடல் அமைப்பில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. கருவான குழந்தையைத் தட்ப வெப்ப சூழ் நிலைகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கு உதவியாகக் கருவரை என்னும் கருப்பையில் அக் குழந்தையைக்கு தேவையான காற்று, நீர், மற்றும் அதற்குத் தேவையான உணவு, அத்தனையும் தாயின் தொப்புள் கொடி வழியாகச் செலுத்தப்படும். அருமையான ஏற்பாடுகள், அனைத்தும் இயற்கையாக ஏற்படுத்தப் பட்டு, அக்குழந்தை சரியான வளர்ச்சி அடைந்தவுடன் வெளியேற்ற அப் பெண்களின் இடுப்புப் பகுதியில் இருக்கும் பெல்விஸ் தானாக விரிவடைந்து மீண்டும் சுருங்கும் வகையில் அமைகிறது.
அப்படிப் பிறந்த குழந்தைக்கு இந்த உலகில் வந்தவுடன் உணவுப் பொருளாக தாய்ப்பால் தானாகவே சுரக்க ஆரம்பிக்கிறது. அந்தத் தாய்ப்பாலில் அக் குழந்தைக்குத் தேவையான அத்துணை மூலப்பொருட்களும் தாய் உண்ணும் உணவுப் பொருட்களிலிருந்து கிரகிக்கப்பட்டு அக்குழந்தையை அடைகிறது.
தாய் குழந்தைக்கு ஊட்டும் தாய்ப்பாலில் அக் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கப் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் தாயின் மார்பகத்தில் ஊறி இயற்கையாகவே கலக்கப்பட்டு குழந்தைக்கு அளிக்கப்படுகிறது.
உலகத்தில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்கிறார்கள், தாய்ப்பாலைவிடச் சிறந்த நோய்தடுப்புச் சாதனம் வேறு எதுவுமே இல்லை என்று. அப்படிப்பட்ட தாய்ப்பாலைத் தான் பெற்ற குழந்தைக்கே ஊட்டத் தயங்கும் தாய்மார்கள் தங்களின் அழகு கெட்டுவிடும் என்று நினைத்துத் தாய்ப்பால் ஊட்ட மறுக்கிறார்கள். உண்மையில் தாய்ப்பால் அளிப்பதால் பெண்களின் அழகு கூடுகிறதே தவிர குறைவதில்லை. இதைப் பல பெரியவர்களும் நிரூபித்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, தாய்ப்பால் கொடுப்பதால் ஒவ்வொரு தாயும் தாய்ப்பாலுடன் சேர்த்துத் தன்னுடைய பாசத்தையும் அன்பையும், கருணையையும், கலந்து ஊட்டுகிறாள். அப்படிப்பட்ட தாய்ப்பாலை ஊட்டத் தவறிய பெண்கள் பிற்காலத்தில் எப்படி அந்தக் குழந்தையிடமிருந்து பாசம், நேசம், அன்பு, கருணை போன்றவற்றை எதிர்பார்க்க முடியும்?
ஆகவே தாய்மார்கள் தங்களுடைய தவறான எண்ணங்களைக் கைவிட்டு தாய்ப்பாலுடன் பாசத்தையும், நேசத்தையும், அன்பையும், கருணையையும் சேர்த்து தாய்ப்பாலூட்டி, இந்த தேசத்துக்கு ஒரு நல்ல ப்ரஜையை அளிக்க வேண்டும்.
யார் கண்டது, நீங்கள் தாய்ப்பால் அளித்து நல்லபடியாக வளர்க்கும் உங்கள் குழந்தை நாளை ஒரு விஞ்ஞானியாகவோ, முதல் அமைச்சராகவோ நம் தேசத்தைக் காப்பாற்றும் ஒரு பெரிய மனிதராகவோ வர பலமான, ப்ரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன.
மிகச்சிறந்த கதாநாயகி அன்னைதான், என்னை என் அன்னைதான் உருவாக்கினார்கள்.
- தாமஸ் எடிசன்
தேவதை போன்ற என் அன்னைக்கு நான் கடமைப் பட்டுள்ளேன்
- ஆப்ரகாம் லிங்கன்
நான் சாதித்திருக்கிறேன் என்றால் அதற்கு என் அன்னைதான் காரணம்
-புகழ் பெற்ற மத போதகர் டிவைட்மோடி
ஒரு நல்ல தாய் இருந்தால் அவளால் எல்லோரும் புனிதமடைகிறார்கள்
- ஜீன்பால் ரிட்சர்
என் தாயின் முத்தம் என்னை ஓவியனாக்கியது
- பெஞ்சிமின் வெஸ்ட்
கின்னஸ் பதிவில் முதலிடம் பிடிக்கக் கூடிய, யாராலும் முந்த முடியாத பல மேதைகளையும், நிர்வாகிகளையும், திறமைசாலிகளையும் உருவாக்கியவள் தாய். உலகிலேயே பெரியதாய், இனியதாய், அரியதாய், நல்லதாய் ஒன்று உண்டென்றால் அவள்தான் "நல்ல தாய்". தாய்ப்பாலைக் கருணையோடு குழவியின் பசியறிந்தூட்டும் தாய் அவள்தான் "நல்ல தாய்".
அதனால்தான் இறைவனே கர்ப வாசத்தின் பெருமை அறிய கிருஷ்ணனாக அவதரித்தான் என்று சொல்லுவர்.
ஆண்பால், பெண்பால், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப் பால் ஆயிரம் இருப்பினும் அத்துணப் பால்களையும் உள்ளடக்கிய தாய்ப்பால் மிகச் சிறந்தது. அதைவிட உலகில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு அளிக்கக்கூடிய செல்வம் வேறெதுவும் இல்லை.
கொண்டாடுவோம் தாய்பால் வாரம், ஏனென்றால் தாய்ப்பாலே "வரம்".

எங்கள் தாய்!!

[kultur13287.gif]

தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்
சூழ்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய்!
யாரும் வகுத்தற்கு அரிய பிராயத்தள்
ஆயினுமே எங்கள் தாய் – இந்தப்
பாருள் எந்நாளும் ஓர் கன்னிகை என்னப்
பயின்றிடுவாள் எங்கள் தாய்
முப்பது கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள்
செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில்
சிந்தனை ஒன்றுடையாள்

நாவினில் வேதமுடையாள் கையில்
நலந்திகழ் வாளுடையாள் – தனை
மேவினர்க்கு இன்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடையாள்

அறுபது கோடி தடக்கைகளாலும்
அறங்கள் நடத்துவள் தாய் – தனைச்
செறுவது நாடி வருபவரைத் துகள்
செய்து கிடத்துவள் தாய்
பூமியினும் பொறை மிக்குடையாள் பெரும்
புண்ணிய நெஞ்சினள் தாய் – எனில்
தோமிழைப்பார் முன் நின்றிடும் கார் கொடும்
துர்க்கை அனையவள் தாய்
கற்றை சடைமதி வைத்த துறவியைக்
கைதொழுவாள் எங்கள் தாய் – கையில்
ஒற்றைத் திகிரி கொண்டு ஏழுலகாளும்
ஒருவனையும் தொழுவாள்
யோகத்திலே நிகரற்றவள் உண்மையும்
ஒன்றென நன்றறிவாள் – உயர்
போகத்திலேயும் நிறைந்தவள் எண்ணரும்
பொற்குவை தானுடையாள்

நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம் புரிவாள் எங்கள் தாய் – அவர்
அல்லவர் ஆயின் அவரை விழுங்கிப் பின்
ஆனந்தக் கூத்திடுவாள்
வெண்மை வளர் இமயாசலன் தந்த
விறன்மகளாம் எங்கள் தாய் – அவன்
திண்மை மறையினும் தான் மறையாள் நித்தம்
சீருறுவாள் எங்கள் தாய்