கூந்தல் பராமரிப்பு
ஒரு கை அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும்.அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம் .
வினிகரை தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும் .
சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும் .
வெந்தயம் ,வேப்பிலை,கறிவேபிள்ளை ,பாசிபருப்பு ,ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில் கொடுத்து மைய அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில் தேய்த்து அலச.. பளபளக்கும் உங்கள் கூந்தல்
ஹேர் டிரையர் (hair dryer)அடிக்கடி உபயோகித்தால் தலை வறண்டு,முடியின் வேர்கள் பழுதடைந்து விடும் .அதிகம் கேமிகல் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர் உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளுவது நல்லது .
ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேண் தொல்லையில் இருந்து விடுபடலாம் .தலை குளித்த பின்பு ஒரு கப் சுடுதண்ணியில் 1/2 கப் வினிகரை கலந்து தலையை அலசவும் அப்படியே துண்டால் தலையை கட்டி கொள்ளவும் .15 நிமிடத்திற்கு ஊறவைக்கவும் பின்பு தலையை பேண் சீப்பால் சீவினால் தலையில் இருக்கும் ஈறு எல்லாம் வந்து விடும் .இரண்டு வாரம் ஒரு முறை செய்து வந்தால் பேண் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபடலாம் .
முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து ,ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் பளபளக்கும் உங்கள் கூந்தல் .
முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன்,வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும் .
இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது .அது முற்றிலும் தவறு .தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் .அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.
எண்ணெய் குளியல் மிகவும் அவசியம் .சிறிது நல்ல எண்ணையில் இரண்டு மிளகு ,பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும் . முடி உதிர்வதையும் தடுக்கலாம் .
கறிவேபிள்ளை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம் .
Free Vector Graphic Background
Downloaded :
65 times
Size :
427.54 kB
வாழ்க வளமுடன்.
நன்றி.......... http://free-vectors.com/ அறிவென்னும் ஆயுதம்
சிக்கலை விரைவாகத் தீர்த்துவிட வேண்டி உணர்ச்சிவயப்பட்டுச் செயலாற்றினால் பெரும்பாலும் அச்சிக்கல் பெருகி விடும். மனிதன் எப்போதும் தன் செயலால் எந்தச் சிக்கலையும் முடிவுக்குக் கொண்டு வருவதில்லை. எங்கு ஒரு சிக்கலை முடித்ததாக எண்ணுகிறானோ அங்கேயே, அதன் வேரிலேயே மற்றொன்று முளைத்து விடும்.
மகளுக்குத் திருமணம் முடிந்துவிட்டால், தனது கவலையெல்லாம் தீரும் என ஒருவர் எண்ணுவார். ஆனால், மணம் முடிந்த பின்னர் எத்தனைச் சிக்கல்கள் எழுகின்றன. வீடு ஒன்று கட்டிவிட்டால், இரண்டு ஏக்கர் நிலம் வாங்கிவிட்டால், இதுபோன்றே ஏதோ விரும்பியதை அடைந்து விட்டால் வாழ்வில் கவலைகள் தீரும் என்று கற்பனை செய்து கொள்வோம். ஆனால், உண்மை என்ன? எதை முடிப்பதாக எண்ணுகிறோமோ, அங்கேயே இன்னொன்று தொடங்கி விடும். அதிலிருந்து பல கவலைகள் கிளைவிடுவதும் உண்டு.
எல்லாச் சிக்கல்களுக்கும் முடிவு இயற்கையிலேதான் உண்டு. ஒவ்வொருசிக்கலையும் வெற்றி கொள்வது தெளிந்து தேர்ந்த அறிவேயாகும். அத்தகைய அறிவு எல்லோரிடமுமிருக்கிறது. அதைத் தூண்டி, அதையே வலுவுள்ள ஆயுதமாகக் கொண்டு கவலைகளை ஒழித்து வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் பெறுவோம்.
மகளுக்குத் திருமணம் முடிந்துவிட்டால், தனது கவலையெல்லாம் தீரும் என ஒருவர் எண்ணுவார். ஆனால், மணம் முடிந்த பின்னர் எத்தனைச் சிக்கல்கள் எழுகின்றன. வீடு ஒன்று கட்டிவிட்டால், இரண்டு ஏக்கர் நிலம் வாங்கிவிட்டால், இதுபோன்றே ஏதோ விரும்பியதை அடைந்து விட்டால் வாழ்வில் கவலைகள் தீரும் என்று கற்பனை செய்து கொள்வோம். ஆனால், உண்மை என்ன? எதை முடிப்பதாக எண்ணுகிறோமோ, அங்கேயே இன்னொன்று தொடங்கி விடும். அதிலிருந்து பல கவலைகள் கிளைவிடுவதும் உண்டு.
எல்லாச் சிக்கல்களுக்கும் முடிவு இயற்கையிலேதான் உண்டு. ஒவ்வொருசிக்கலையும் வெற்றி கொள்வது தெளிந்து தேர்ந்த அறிவேயாகும். அத்தகைய அறிவு எல்லோரிடமுமிருக்கிறது. அதைத் தூண்டி, அதையே வலுவுள்ள ஆயுதமாகக் கொண்டு கவலைகளை ஒழித்து வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் பெறுவோம்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தற்போது முதலிடத்தில் முகேஷ் அம்பானி
உலக பணக்காரர்கள் பட்டியலில் உருக்கு அதிபர் லட்சுமி மிட்டலை பின்னுக்குத் தள்ளி முன்னேறினார் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி.இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தற்போது முதலிடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார்.வெளிநாடு வாழ் இந்தியரும் உருக்கு அதிபருமான லட்சுமி மிட்டல் அடுத்த இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இது தெரிய வந்துள்ளது.
1,950-கோடி டாலர் சொத்து மதிப்புடன் உலக அளவில் ஏழாவது பணக்காரராக முகேஷ் அம்பானி உள்ளார்.இவருக்கு அடுத்தபடியாக எட்டாவது இடத்தில் 1,930-கோடி டாலர் சொத்து மதிப்புடன் லட்சுமி மிட்டல் உள்ளார்.
2008-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் லட்சுமி மிட்டல் 2,500-கோடி டாலர் சொத்து மதிப்புடன் நான்காம் இடத்தில் இருந்தார்.
தொடர்ந்து 4,000-கோடி டாலர் சொத்து மதிப்புடன் மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2,300-கோடி டாலராக இருந்தது.
அனில் அம்பானி 1000-கோடி டாலர் சொத்து மதிப்புடன் 34-வது இடத்தில் உள்ளார்.கடந்த ஆண்டு 3,200-கோடி டாலர் சொத்து மதிப்புடன் அனில் அம்பானி ஆறாமிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு பட்டியலில் 10-வது இடத்தைப் பிடித்த ரியல் எஸ்டேட் அதிபர் கே.பி.சிங்,தற்போது 98-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.இவரது சொத்து மதிப்பு 500-கோடி டாலராக சரிந்துள்ளது.கடந்த ஆண்டு இவரது சொத்து மதிப்பு 2,500-கோடி டாலராக இருந்தது.
இந்திய கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 18,000-கோடி டாலரிலிருந்து தற்போது 10,900-கோடி டாலராக சரிந்துள்ளது.
கடந்த ஆண்டு கோடீஸ்வரர்கள் பட்டியலில் 53-இந்தியர்கள் இடம்பெற்றிருந்தனர்.இது தற்போது 10-ஆகக் குறைந்துள்ளது.முதல் பத்து பேரில் 2-பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
தொழிலதிபர் விஜய் மல்லையா,காற்றாலை அதிபர் துளசி தாந்தி,முகேஷ் அம்பானியின் நெருங்கிய தோழர் ஆனந்த் ஜெயின் ஆகியோர் பட்டியலில் இடம்பெறவில்லை.
இவர்கள் தவிர,ஜெட் ஏர்வேஸ் அதிபர் நரேஷ் கோயல்,யுனிடெக் அதிபர் எஸ்.ரமேஷ் சந்திரா,இந்தியாபுல்ஸ் அதிபர் சமீர் கெலோட்,எம்சிஎக்ஸ் அதிபர் ஜிக்னேஷ் ஷா,முதலீட்டு சந்தை வர்த்தகர் நிமேஷ் கம்பானி,கெளதம் தாப்பர்,கிராசியஸ் சல்தானா ஆகியோர் பட்டியலில் விடுபட்ட கோடீஸ்வரர்களாவர்.
பிர்லா குழும அதிபர் குமார் மங்களம் பிர்லா(124),கோஜ்ரெஜ் தலைவர் ஆதி கோத்ரெஜ்(183),சாங்வி குழும அதிபர் திலீப் சாங்வி (205),ஜிண்டால் குழுமத்தின் சாவித்ரி ஜிண்டால்(234) மற்றும் மல்வீந்தர் சிங் (246),பலோன்ஜி மிஸ்திரி(261),ஜிஎம் ராவ்(318),மிக்கி ஜக்தானி(334)ஆகியோர் பட்டியலில் இடம்பெற்ற பிற இந்திய கோடீஸ்வரர்களாவர்.
கெளதம் அதானி,இந்து ஜெயின்,ஷிவ் நாடார்,சைரஸ் பூனாவாலா,அனில் அகர்வால்,உதய் கோடக்,கலாநிதி மாறன்,சந்துரு ரஹேஜா,சுபாஷ் சந்திரா,அனுராக் தீட்சித் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மொத்தம் 738-பேர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.இவர்களில் மிக அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாவர்.முதலிரண்டு இடங்களில் பில்கேட்ஸ் மற்றும் வாரென் பஃபெட் ஆகியோர் உள்ளனர்.
Subscribe to:
Comments (Atom)



